கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு இன்று(30) முதல் வழங்கப்படும் என விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பயிர் சேதத்திற்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபையின் தலைவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் குறித்த நட்டஈட்டுத் தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
இதன்படி, 13, 379 ஏக்கரில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட 6, 234 விவசாயிகளுக்கு இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் காப்பீட்டு சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.