இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் காலஞ்சென்ற மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அன்னாரின் பூதவுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று அதிகாலை அஞ்சலி செலுத்தினார்.
திடீர் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாவை சேனாதிராஜா நேற்றிரவு (29) உயிரிழந்தார்.
காலஞ்சென்ற மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் அரசடி வீதி, மாவிட்டபுரம், தெல்லிப்பழையிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

