யாழ் . காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்று இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இந்திய மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய இலங்கை கடற்படையினர் நேற்று (28/01) அதிகாலை நடவடிக்கை எடுத்துள்ளனர் .
இதன்போது குழுவாக இணைந்து இலங்கை கடற்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ள தமிழக மீனவர்கள் முயற்சித்துள்ளனர்.
பதில் தாக்குதலின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தமிழக மீனவர்கள் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் தெரிவித்தார் .
காயமடைந்த இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.