தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட 17
இந்திய மீனவர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் நீதவான் முன்னிலையில் இந்திய மீனவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 07 ஆம் திகதி வரை அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 24ஆம் திகதி தலைமன்னார் கடலில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த போதே இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் 17 பேரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
