கிழக்கு மாகாணத்தில் 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் : 5 வருடங்களுக்கு இடமாற்றமில்லை என அறிவிப்பு

wp-namathulk.admin
1 Min Read

கிழக்கு மாகாண அரசாங்க ஆசிரியர் சேவைக்கு 2025ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் ஒரு அங்கமாக 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் அரச அதிகாரிகளின் பங்கேற்புடன் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது .

நியமனக்கடிதங்களின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பாடசாலைகளில் தவறாது 5 வருடங்கள் பணியாற்ற வேண்டும் என இதன்போது ஆளுநர் தெரிவித்தார்.

அவ்வாறு பணியற்றிய பின்னராகவே, இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும், இடமாற்றம் என கருதி கல்வி அமைச்சுக்கோ அல்லது ஆளுநர் அலுவலகத்திற்கோ வருகை தர வேண்டாம் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார் .

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *