தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காக 200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய் சொட்டுக்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விவசாயத் திணைக்களம், தெங்கு ஆராய்ச்சி நிறுவனம்,தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை,தாவரத் தொற்றுக்காப்பு சேவை மற்றும் இலங்கை தரநிர்ணயக் கட்டளைகள் நிறுவனம்
ஆகியன இணைந்து குளிரூட்டப்பட்ட தேங்காய் சொட்டு மற்றும் உலர் தேங்காய் சொட்டு துண்டுகள் (கொப்பரா அல்லாத) தேங்காய் பால்,தேங்காய்ப் பால்மா மற்றும் பதனிடப்பட்ட தேங்காய்ப்பூ போன்றவற்றின் இறக்குமதிக்கக்கான வழிகாட்டியை தயாரித்து அமைச்சரவையிடம் சமர்ப்பித்தன.
இதன் பிரகாரம் 200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய் சொட்டு சார்ந்த உற்பத்திகளையும் மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர் தேங்காய் சொட்டு துண்டுகளையும் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Link : https://namathulk.com