குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்வதன் மூலம் நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இதற்குத் தேவையான மேலதிக பணிக்குழாமினரை குறித்த திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை அரச சேவைகள் ஆணைக்குழுவின் உடன்பாட்டுடன் ஒப்பந்த அடிப்படையில் கடமையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது அரச சேவையில் ஈடுபடுகின்ற ஊழியர்களை பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சிடம் கேட்டறிந்து இணைப்புச் செய்வதன் மூலமும் ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com