ரமழான் நோன்பு காலப்பகுதியில், அரச சேவையில் பணிப்புரியும் முஸ்லீம் ஊழியர்களுக்கான விடுமுறை நேரம் அடங்கிய சுற்றறிக்கை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தொழுகைகளும் மதவழிபாடுகளும் நாளாந்தம் பின்வரும் நேர அட்டவணைப்படி நிகழும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மு.ப. 03.30 முதல் மு.ப. 06.00 வரை
பி.ப 03.15 முதல் பி.ப 04.15 வரை
பி.ப 06.00 முதல் பி.ப 07.00 வரை
பி.ப 07.30 முதல் பி.ப 10.30 வரை
இக்காலத்தின் போது ஊழியர்கள் சமய வழிபாடுகளில் கலந்து கொள்ளக்கூடிய வகையில் வேலை நேரங்களை ஒழுங்கு செய்து கொடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும் விசேட விடுமுறை அங்கீகரிக்கப்படலாம் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ரமழான் காலப்பகுதியில் இறுதி திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாக அரச சேவை கூட்டுத்தாபனங்கள், நியதி சட்டசபைகள் ஆகியவற்றில் கடமையாற்றும் தகைமையுடைய முஸ்லீம் ஊழியர்களுக்கு விழா முற்பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com