2025 இல், 5,459 டெங்கு நோயாளர்கள் பதிவு.

Aarani Editor
1 Min Read
டெங்கு நோயாளர்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டில், இதுவரையில் சுமார் 5,459 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், கடந்த மாதத்தில் இரண்டு டெங்கு இறப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, ஜனவரி மாதத்தில 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அதில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அதன் எண்ணிக்கை 849 ஆகும்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் 740 நோயாளர்களும், காலி மாவட்டத்தில் 337 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 354 நோயாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 321 நோயாளர்களும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 219 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *