வவுனியாவில் பெரும் போக நெல் அறுவடை ஆரம்பம்

Aarani Editor
0 Min Read
நெல் அறுவடை

வவுனியா மாவட்டத்தில் இம்முறை 11,490 ஏக்கரில் நெல் அறுடை மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி ஆணையாளர் வி.கமலரூபன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் கடந்த பெரும்போகத்தில் 60,831 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது 11,490 ஏக்கரில் நெல்அறுவடை மேற்கொள்ளப்படுகின்றது.

கடந்த வருட இறுதியிலும்,இவ்வருட ஆரம்பத்திலும் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் 2547.5 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்கள் அழிவடைந்ததாகவும் மாவட்ட கமநல அபிவிருத்தி ஆணையாளர்  தெரிவித்தார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *