இலங்கையின் புதிய முப்படைத் தளபதிகளும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை
நேற்று (06) பிற்பகல் சம்பிரதாயபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினர்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிக்கோ, புதிய
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, புதியவிமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிாிசிங்க ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்தனர்.
கடமைகளை பதவியேற்ற பின்னர், முப்படைத் தளபதிகளும் ஜனாதிபதியை சம்பிரதாயபூர்வமாக சந்தித்ததுடன் , ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினர்.
Link : https://namathulk.com