சட்டவிரோத டைனமைட் மீன்பிடியை தடைசெய்யக்கோரி திருகோணமலை மூதூர் இளக்கந்தை கிராம மீனவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையால் மீன்கள் அழிவடைந்து செல்வதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதனால் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட தமது தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.
Link : https://namathulk.com