இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழுவிற்கும் இடையில் சந்திப்பு.

Aarani Editor
0 Min Read
இந்திய உயர்ஸ்தானிகருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழுவிற்கும் இடையில் சந்திப்பு .

இலங்கை வாழ் தமிழ் மக்கள், விசேடமாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இந்தியாவின் விசேட கடப்பாடு தொடர்பில் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை-இந்திய நாடுகளுக்கு இடையிலான பொதுவான பொருளாதார, சமூக, கலாச்சார ஒத்துழைப்புகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று நிகழ்ந்த இந்த சந்திப்பில், த.மு.கூ தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்களான பழனி திகாம்பரம், வே, இராதாகிருஷ்ணன், சர்வதேச விவகார உப தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *