இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பிற்குள் இரண்டு படகுகளுடன் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட இந்திய மீனவர்கள் இரணைதீவிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இந்திய மீனவர்களை, கடற்றொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி பணிமனையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



Link: https://namathulk.com