நானுஓயா மற்றும் பதுளை நிலையங்களுக்கு இடையிலான ‘எல்ல ஒடிசி நானுஓயா’ என்ற புதிய ரயில் சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தலைமையில் இன்று இந்த புதிய ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பயணிகளின் சுற்றுலா தேவையின் அடிப்படையில் இந்த ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர இதன்போது தெரிவித்தார்.
இந்த ரயில் சேவை செவ்வாய்க்கிழமையை தவிர அனைத்து நாட்களிலும் காலை 8.10 க்கு நானுஓயாவிலிருந்து பதுளைக்கும் பிற்பகல் ஒரு மணிக்கு பதுளையிலிருந்து கண்டிக்கும் இயக்கப்படும் எனவும் ரயில்வே பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.
அத்துடன், முதல் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு 7,000 ரூபாவும் இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு 6,000 ரூபாவும் மூன்றாம் வகுப்பில் முன்பதிவு செய்யப்படும் இருக்கைகளுக்கு 5,000 ரூபாவும் அறவிடப்படும் எனவும் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் கூறினார்.
Link : https://namathulk.com