ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க துபாய் விஜயம்.

Aarani Editor
1 Min Read
நுரகுமார திஸாநாயக்க துபாய் விஜயம்

2025ஆம் ஆண்டுக்கான உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியாவின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபதியின் இந்த விஜயம் அமையவுள்ளது.

இந்த விஜயத்தின் போது இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணைத் தலைவரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் ஜனாதிபதி சந்திக்க உள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஜனாதிபதி மேற்கொள்ளும் இந்த விஜயத்தினால் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவு வலுப்படுத்தப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *