மன்னார் மக்களுக்கு சீனாவால் நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு.

Aarani Editor
1 Min Read
மன்னார்

சீனாவின் ‘சகோதர பாசம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட, 350 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளு குடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.

கட்டுக்காரன் குடியிருப்பு மற்றும் துள்ளுக்குடியிறுப்பு பகுதிகளில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பின் தங்கிய குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் 350 குடும்பங்களுக்கு தலா 6490 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் பிரதேச செயலாளர்.எம்.பிரதீப் மற்றும் சீன தூதரகத்தின் உயரதிகாரிகள், துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *