சீனாவின் சகோதர பாசம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் , யாழ்.மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 1070 குடும்பங்களுக்கு இன்று நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei))இன் பங்குபற்றுதலுடன்
தலா 6,490 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதிகள் இன்று(10) வழங்கப்பட்டன.
யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சீன தூதரகத்தின் உயரதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,
துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Link : https://namathulk.com