யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவபீட மாணவர்களிடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றபோது 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது ஏற்பட்ட மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Link : https://namathulk.com