வவுனியா மக்களுக்கு சீனாவின் நிவாரணம்

Aarani Editor
1 Min Read
சீனாவின் நிவாரணம்

வவுனியாவில், வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 350 குடும்பங்களுக்கு, சீன தூதரகத்தினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சீனத்தூரகத்தின் பிரதி பிரதானி சூ.யன்வெய் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வடமாகாணத்தில் 2,470 குடும்பங்களுக்கு தலா 6,490ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ந.கமலதாசன் மற்றும் சீன தூதரக இடைக்கால பொறுப்பாளர் ஜுயானுவேல், சீன தூதரக அரசியல் பிரிவுத் தலைவர் குயின் லிகோங், மற்றும் சீன தூதரக அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *