பொதுச் சேவையில் காணப்படும் 7,456 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அவர் இதனை கூறினார் .
பொதுச் சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மதிப்பாய்வு செய்வதற்கும், பணியாளர்களை நிர்வகிப்பதற்கும் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இதன்படி, பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழுவின் அறிக்கைகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.
Link : https://namathulk.com