யாழில் ஆடைகளை கலைத்து இளைஞனை தாக்கியமை தொடர்பில் இதுவரை நால்வர் கைது : ஏனையவர்கள் தலைமறைவு

Aarani Editor
1 Min Read
நால்வர் கைது

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் ஆடைகளை கலைத்து இளைஞனை தாக்கியமை தொடர்பில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடபில் தேடப்பட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஆறு பேர் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கோண்டாவில் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் தனது வீட்டில் வசித்த இளைஞனை , குடும்ப அங்கத்தவர்களின் முன்னிலையில் ஆடைகளை கலைத்து தாக்குதல் நாடத்திய குழுவினர் தப்பிச் சென்றனர்.

கோப்பாய் பொலிசார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *