வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் கிராமிய வீதிகளை புனரமைப்பு செய்து மேம்படுத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்.

Aarani Editor
1 Min Read
அமைச்சரவை

தற்போதைய அரசாங்கத்தினால் கிராமிய வீதியை அபிவிருத்தி செய்தல் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் முக்கிய பணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன்படி, வீதி புனரமைப்பு செய்தல், நிர்மாணித்தல் மற்றும் பராமரிப்பதற்கான விரிவான அணுகுமுறையை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பல வீதிகள் புனரமைக்கப்பட வேண்டிய நிலைமையில் காணப்படுவதுடன், ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவையும் பிரநிதித்துவப்படுத்தும் வகையில் வடமாகாணத்தில் 1,500 கிலோமீற்றர்கள் வீதியும் , கிழக்கு மாகாணத்தில் 500 கிலோ மீற்றர்கள் வீதியும் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உத்தேசிக்கப்பட்ட கிராமிய வீதிகளை புனரமைக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *