பொதுமக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை.

Aarani Editor
1 Min Read
மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கியில் வேலைவாய்ப்புகள் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான விளம்பரங்கள் அதிகம் பகிரப்பட்டு வந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி அது தொடர்பான எச்சரிக்கையினை பொதுமக்களுக்கு விடுத்துள்ளது.

இதன்படி, இலங்கை மத்திய வங்கி தொழில் வாய்ப்புக்கள் எதையும் மூன்றாம் தரப்பு தளங்களில் விளம்பரப்படுத்துவதில்லை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன், அனைத்து உத்தியோகபூர்வ வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களையும் இலங்கை மத்திய வங்கியின் வலைத்தளம் மற்றும் உத்தியோகபூர்வ சமூக ஊடக வலைத்தளங்களில் இருந்து மட்டுமே பெற முடியும் எனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

மேலும், மத்திய வங்கி சார்பில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு வேறு வலைத்தளங்களுக்கோ அல்லது தனிநபர்களுக்கோ அதிகாரமளிக்கப்படவில்லை எனவும் இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *