யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஐ.நாவின் விசேட நிகழ்வில் டக்ளஸ் பங்கேற்பு

Aarani Editor
1 Min Read
ஐ.நாவின் விசேட நிகழ்வில் டக்ளஸ் பங்கேற்பு

ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது ஆண்டு நிறைவும் இலங்கையில் இந்த அமைப்பு கால்பதித்து 70 வருட நிறைவை கொண்டாடும் முகமாகவே நிகழ்வு ஏற்பாடு செய்யப்படிருந்தது.

உலக நாடுகளுக்கிடையே நட்புறவு மற்றும் உறவுகளை வளர்த்தல், பன்னாட்டு ஒத்துழைப்பைப் பேணல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நோக்கங்களைக் மையமாக கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *