இலங்கைக்கு கடத்த இருந்த உலர்ந்த இஞ்சி இராமநாதபுரத்தில் பறிமுதல்

Aarani Editor
1 Min Read
சுங்கத்துறை

இந்தியா, இராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த இஞ்சி, பீடி இலைகள், வலி நிவாரண மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டு படகுகளில் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு பொலிசாருக்கு இன்று அதிகாலை திருப்புல்லாணி அடுத்த தோப்புவலசை கடற்கரையிலிருந்து படகு மூலமாக உலர்ந்த இஞ்சி (சுக்கு) இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு பொலிசார் சேதுகரையிலிருந்து தோப்புவலசை வரையிலான கடற்கரை பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது 50 மூடைகளில் சுமார் இரண்டு தொன் எடை கொண்ட உலர்ந்த இஞ்சி மூடைகள் நாட்டுப்படகில் ஏற்றுவதற்காக கடற்கரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து உலர்ந்த இஞ்சி மூட்டைகளை திருப்புல்லாணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த, பின்னர் இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *