நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம். தெரிவித்துள்ளது.
அத்துடன், பெரும்பாலான பிரதேசங்களில் அதிகாலை வேளையில் குளிரான வானிலை நிலவக்கூடும் என்பதுடன், நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் உறைபனி பெய்யும் வாய்ப்புள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Link : https://namathulk.com