கல்வித்துறையில் உள்ள அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடல் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் குறித்து தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைக்க தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இதன்போது வாய்ப்பு வழங்கப்பட்டது.
அத்துடன், தொழிற்சங்க பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கவனம் செலுத்தினார்.
இந்த கலந்துரையாடலில், கல்வி நிர்வாகம், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர் சேவை போன்ற அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க பிரதிநிதிகள், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேசிய கல்வி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பரீட்சை திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Link : https://namathulk.com