ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை சேவைகளை வழங்கும் புதிய அமைப்பை உருவாக்கத் திட்டம் – சுகாதார அமைச்சர்

Aarani Editor
1 Min Read
சுகாதார அமைச்சர்

ஒரே வைத்தியசாலையில் பல்வேறு மருத்துவ முறைகளைக் கொண்ட ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை சேவைகளை வழங்கும் புதிய அமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தை பல்லேகல மாகாண ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தில் உள்ள பல்லேகல மாகாண ஆயுர்வேத வைத்தியசாலையில், தற்போதைய சிகிச்சை சேவைகள் தொடர்பில் சுகாதார அமைச்சரினால் ஆய்வு செய்யப்பட்டது.

இதன்போது, மேற்கத்திய மருத்துவ முறைகள் மற்றும் உள்ளூர் சிகிச்சை முறைகள் மூலம் மக்களுக்கு சிறந்த, பாதுகாப்பான மற்றும் உயர்ந்த வாழ்க்கை தரத்தை வழங்கும் நம்பிக்கையுடன் இந்த புதிய திட்டங்கள் தொடங்கப்படுவதாகவும், இது உள்ளூர் மருத்துவ சிகிச்சை சேவைகளுக்கு மதிப்பு மற்றும் சிறப்பை வழங்க உதவும் என்றும் சுகாதார அமைச்சர் வலியுறுத்தினார்.

அத்துடன், பல்லேகல ஆயுர்வேத வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு, மருந்து அரைக்கும் பிரிவு, சமையலறை, அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் கட்டண வார்டுகளை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

இதன்போது, மத்திய மாகாணத்திற்கு சிறந்த சேவையை வழங்கும் இந்த ஆயுர்வேத வைத்தியசாலையை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வைத்தியசாலையாக மாற்ற முடியும் எனவும் சுகாதார அமைச்சர் கூறினார்.

அத்துடன், வைத்தியசாலை வழங்கும் சிகிச்சை சேவைகளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்களிடையே ஊக்குவிக்கவும், அதன் மூலம் அந்நிய செலாவணியை உருவாக்கவும் முடியும் என சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *