பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் – அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்

Aarani Editor
1 Min Read
வேலையற்ற பட்டதாரிகள்

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கோரி காரைதீவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

காரைதீவு விபுலானந்தா சதுக்கத்திற்கு அருகில் பல்வேறு சுலோகங்களை ஏந்தி பட்டதாரிகள் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை வேலைவாய்ப்பு தொடர்பில் எமக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் வெளிப்படையாக பட்டதாரிகளின் நிலைமை குறித்து தகவல்களை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த போராட்டத்திற்கு காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எஸ்.ஜெகத் வருகை தந்து பார்வையிட்டதுடன் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *