திருகோணமலை சம்பூரில் இலங்கை, இந்திய கூட்டுத் திட்டத்தில் 120MW சூரிய மின்னுற்பத்தி நிலையம்

Aarani Editor
1 Min Read
இலங்கை இந்திய கூட்டு

கடந்த 09ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மின்சார விநியோக தடைக் காரணமாக முழு இலங்கையும் இருளில் மூழ்கியது.

இதனால், நாடு முழுதும் பல செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்ததோடு, பொதுமக்களும் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகினர்.

இதனை கருத்திற் கொண்டு இலங்கை மின்சார சபை, மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த உடனடி மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை செயற்படுத்த தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், இலங்கை இந்திய கூட்டு முயற்சியின் கீழ், திருகோணமலை சம்பூரில் 120MW சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின்சார கூட்டுத்தாபனத்தின் கூட்டு தொழில் முயற்சி கம்பனியால் நிர்மாணித்தல், உரிமை வகித்தல் மற்றும் அமுல்படுத்தல் அடிப்படையில் திருகோணமலை சம்பூரில் 120MW சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கான இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.

இதன்படி, இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின் தேசிய அனல் மின்சார கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சி கம்பனியாக நிறுவப்பட்ட Trincomalee Power Company Ltd மூலம் இத்திட்டதிட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைவாக, இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *