வெளிநாட்டு மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையினால் இலங்கை மீனவர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இந்த விடயம் சர்வதேச கடற்பரப்பில் எல்லை பிரச்சினைகளையும் தோற்றுவித்துள்ளது.
இதில், இந்திய மீனவர்களின் இழுவை படகு பிரச்சினையும் ஒன்றாகும்.
இரு நாடுகளும் இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் இன்றளவும் தீர்வு காண முடியாத பிரச்சினையாகவே காணப்படுகின்றது.
இதனால், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களை கருத்திற் கொண்டு, இலங்கை கடல் எல்லைக்குள் கடற்படை ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட 3 படகுகளுடன் 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இன்று அதிகாலை மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
2025ஆம் ஆண்டு, இதுவரையிலும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், 13 இந்திய மீன்பிடிப் படகுகளும், 99 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Link : https://namathulk.com