வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மஹா சிவராத்திரிக்கு மறுநாள் வியாழக்கிழமை (27.02.2025) இந்த விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக 01.03.2025 சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என்றும் ஆளுநர் கூறியுள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com