நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் தீவிர சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது .
முழுமையான சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற வளாகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார் .
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற கட்டட வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .
நீதிமன்றத்தின் பிரதான நுழை வாசலில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com