பாதாள உலகக் குழுவை முடிவுக்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – ஜனாதிபதி

Aarani Editor
1 Min Read
பாதாள உலகக் குழு

எதிர்காலத்தில் பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகக் குழுவின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

எனினும் பாதாள உலகக் குழுவின் செயற்பாடுகளை முழுமையாக நிறுத்த சிறிது காலம் தேவை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இதன்போது சுட்டிக்காட்டினார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *