யாழ்ப்பாணம் வலி வடக்கில் அமைந்துள்ள தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் நடாத்தியமை தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
தையிட்டி விகாரைக்கு அருகில் கடந்த 12 ஆம் திகதி மேற்கொண்ட போராட்டம் தொடர்பில் விகாரையின் தேரரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட மூன்று பேரும் சில மணித்தியால காத்திருப்புக்கு பின்னர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Link : https://namathulk.com