எல்லைத் தாண்டி மீன்பிடிக்கும் குற்றச்சாட்டின் கீழ் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படகின்றமையும், அவர்களின் இழுவை படகுகளை பறிமுதல் செய்யப்டுகின்றமையும் அண்மைகாலமாக அதிகரித்து வருகின்றது.
அத்துடன், இந்திய மீனவர்களுக்காக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
அதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டால், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களை கருத்திற் கொண்டு, இலங்கை கடல் எல்லைக்குள் கடற்படை ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் அடிப்படையில், இன்று அதிகாலை இலங்கை கடற்படை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுப்பட்ட 32 இந்திய மீனவர்களையும், 5 படகுகளையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, மன்னார் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வருடத்தில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டிற்காக 18 இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் 131 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Link: https://namathulk.com