யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மாடு கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது

Aarani Editor
0 Min Read
மாடு கடத்தல்

சட்டவிரோதமாக மாடுகளை லொறியில் ஏற்றிச்சென்ற இருவர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர் .

சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறியை சோதனைக்கு உட்படுத்திய போது அதில் 18 மாடுகள் ஏற்றிச் செல்லப்பட்டன.

மாடுகளை கொண்டு செல்வதற்கான உரிய அனுமதிப்பத்திரங்கள் சந்தேகநபர்களிடம் இருக்கவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

மாடுகளை பொலிஸ் பராமரிப்பின் கீழ் கொண்டு வந்ததுடன், சந்தேகநபர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

சாவகச்சேரி பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *