யாழ் இசைக்கலையக்கத்தின் 26 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நாடாளவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசைப்போட்டி நாளை காலை ஆரம்பிக்கபடவுள்ளது.
யாழ் – கண்டி வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்றத்தில் இந்த போட்டிகள் ஆரம்பமாக உள்ளதாக இசைக்கலையக்கத்தின் தலைவர் செல்வ ரவிசங்கர் தெரிவித்தார்.
குறித்த போட்டியானது இலங்கையில் வாழுகின்ற 16 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட இசை ஆர்வலர்களை வெளிக்கொண்டு வரும் முயற்சியாக அமைந்துள்ளது.
பல இசைக்கலைஞர்கள் இலை மறை காயாக மறைந்துள்ள நிலையில் அவர்களை வெளியுலகிற்கு எடுத்து காட்டும் முயற்சியாக இந்த போட்டி அமைந்துள்ளது.
போட்டியில் பங்குபற்ற ஏற்கனவே விண்ணபித்தவர்களும், புதிதாக இணைய விரும்புபவர்களும் நாளைய தினம் நேரடியாக போட்டிகளில் கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com