100 வருடங்களின் பின்னர் எகிப்திய பேரரசனின் கல்லறை ஒன்று கண்டுபிடிப்பு

Aarani Editor
1 Min Read
கல்லறை

மிக நீண்ட நாட்களாக ஆராய்ச்சியாளர்களால் தேடப்பட்டுவந்த எகிப்திய மன்னன் இரண்டாம் பார்வோன் துட்மோசின் (Pharaoh Thutmose II ) கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வரசனின் மம்மி 1800 களிலேயே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவருடைய கல்லறை இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பியர்ஸ் லிதர்லேண்டால், எகிப்தில் மன்னர்களின் பள்ளத்தாக்குக்கு மேற்கே சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லக்சோரில் உள்ள தெபன் மலைகளில் ஒரு நீர்வீழ்ச்சிக்கு அடியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் எவ்வித பொருட்களும் கிடைக்காத நிலையில், கிமு 1479 இல் பார்வோன் இறந்த ஆறு ஆண்டுகளுக்குள் கல்லறை வெள்ளத்தில் மூழ்கி வெற்றிடமாகியிருக்கலாம் என அகழ்வாய்வுக் குழு குறிப்பிடுகின்றது.

தற்போது இரண்டாம் துட்மோஸுக்கு சொந்தமான இரண்டாவது கல்லறையின் இருப்பிடத்தை அடையாளம் கண்டுள்ளதாக தான் நம்புவதாக ஆராய்ச்சியாளர் லிதர்லேண்ட் கூறியுள்ளார்.

மேலும் இது, இளம் பார்வோனின் மம்மி செய்யப்பட்ட உடலையும் கல்லறைப் பொருட்களையும் கொண்டிருக்கலாம் என அவர் சந்தேகிக்கிறார்.

சுண்ணாம்புக் கற்படைகள், இடிபாடுகள், சாம்பல் மற்றும் மண் படைகள் ஆகியவற்றிற்கு அடியில் 23 மீற்றரின் கீழ் இரகசியமாக புதைக்கப்பட்ட இந்த இரண்டாவது கல்லறை 3,500 ஆண்டுகளாக மறைந்திருப்பதாகத் தொல்லியலாளர்கள் நம்புகின்றனர்.

“நிலப்பரப்பில் ஒரு புள்ளிக்கு மேலே மனிதனால் உருவாக்கப்பட்ட அடுக்குகளின் குவியல்கள் 23 மீட்டருக்கு உள்ளன.

வெள்ளத்திற்குப் பிறகு கல்லறையின் உள்ளடக்கங்கள் எங்கு மாற்றப்பட்டன என்பதற்கான தடயங்களை முதற் கல்லறைக்கு அருகில் தேடும் போது ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கல்வெட்டு, எகிப்தின் மன்னரின் மனைவி மற்றும் சகோதரி ஹட்செப்சட் ஆகியோரால் உள்ளடக்கங்கள் அருகிலுள்ள இன்னும் கண்டுபிடிக்கப்படாத இரண்டாவது கல்லறைக்கு நகர்த்தப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

இது உலக வரலாற்றில் மிக முக்கிய கண்டுபிடிப்புக்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *