சிவகார்த்திகேயனின் அடுத்த படபிடிப்பை இலங்கையில் ஆரம்பிக்க திட்டம்

Aarani Editor
1 Min Read
சிவகார்த்திகேயன்

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் நடித்துள்ள பீரியட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்துள்ளது.

படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் ரவி மோகன், படத்தின் அடுத்த ஒளிப்பதிவுகள் இலங்கையில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட ஒளிப்பதிவு வெற்றிகரமாக முடிவடைந்ததாக தெரிவித்துள்ள நடிகர் ரவி மோகன், படம் அழகாக தயாரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் இலங்கை செல்ல உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பராசக்தி திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. 1960களின் மெட்ராஸை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஜிவி பிரகாஷின் இசையில் புகழ்பெற்ற ரவி கே சந்திரனின் படத்திற்கான ஒளிப்பதிவு நடைபெறுகிறது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *