சுமார் ஒரு தசாப்தத்தில் கடந்த ஆண்டு, அகதிகள் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட மக்களை பெருமளவில் கனடா நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான ஆளும் தாராளவாதிகள் ஆட்சிக்கு வந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து கனடாவின் இந்த நடவடிக்கைகள் தீவிரத்தை எட்டியுள்ளன.
கடந்த வருடம் ஜனவரி முதல் நவம்பர் 19 வரை 7,300 பேர் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இது 2023 ஆம் ஆண்டை விட 8.4% அதிகரிப்பாகவும், 2022 ஐ விட 95% அதிகரிப்பாகவும் காணப்படுகின்றது.
இந்த ஆண்டும் மக்களை நாடுகடத்தப்படுவதற்கு அதிக பணத்தை கனடா அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் 11 மாதங்களில் நாடு கடத்தப்பட்ட 7,300 பேரில் 79% பேர் அகதிகள் அந்தஸ்துக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் நாடு கடத்தப்பட்டனர்.
Link : https://namathulk.com