கண்டி தலதா மாளிகையில் சிறப்பு கண்காட்சி ஏற்பாடு

Aarani Editor
1 Min Read
கண்காட்சி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரைக்கமைய தலதா மாளிகையின் சிறப்பு கண்காட்சியை ஏப்ரல் 18 முதல் 27 வரை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதி பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும், 19 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மதியம் 12:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் தலதா மாளிகையின் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது.

இது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (02) நடைபெற்றது.

16 வருடங்களுக்குப் பிறகு நாட்டின் பௌத்த மக்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மகாநாயக்க தேரர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இந்த நாட்டின் பௌத்த மக்கள் தங்கள் வாழ்வில் எப்போதாவது ஒரு கட்டத்தில் புனித சின்னத்தை வழிபடுவதே அவர்களின் விருப்பம் என்று கூறினார்.

நாட்டில் இழந்து வரும் நாகரிகத்தை மீட்டெடுக்கவும், மத மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்கவும் இந்த வாய்ப்பு உதவும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டில் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்க இந்த நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புத்தாண்டின் நீட்சியாக நடைபெறும் தலதா மாளிகையின் நினைவுச்சின்னத்தின் சிறப்பு கண்காட்சி நாட்டை புதிய திசையில் இட்டுச் செல்லும் என்றும் தெரிவித்தார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *