கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Aarani Editor
1 Min Read
வான் கதவுகள்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால், பொலன்னறுவை மாவட்டம் உட்பட மகாவலி பி வலயத்தில், பல முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகளும், கவுடுல்ல குளத்தின் 2 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், மாதுரு ஓயா மற்றும் குடா ஓயா ஆகியவை நிரம்பி வழிவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை காரணமாக பல பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதுளை ஊவா பரணகம – கஹடதலாவ பகுதியில் உள்ள தோட்ட வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *