கொழும்பு, தெஹிவளை பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி சிரேஸ்ட ஊடகவியலாளர் கீத் நோயர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும், நவகத்தேகம மற்றும் உலுக்குலம பகுதியை சேர்ந்த ஓய்வுப் பெற்ற இராணுவ புலனாய்வு அதிகாரிகள் என குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com