வடக்கு, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை , அநுராதபுரம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், தென் , ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா , மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடையே சிறிதளவு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
இடியுடன்கூடிய மழையின் போது பலத்த காற்று வீசக் கூடும். அத்துடன் மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு பெற முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.