மூன்றாவது முறையாக ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் ஏற்பாட்டின் கீழ் 60 தோட்டங்களில் பணியாற்றும் 42 தொழிலாளர்களுக்கு இடையிலான சிறந்த தரமான பச்சை தேயிலை கொழுந்து பறிப்பாளரை தெரிவு செய்யும் போட்டி நானுஓயா – ரதல்ல, தேயிலை மலையில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில், 20 நிமிடங்கள் வழங்கப்பட்டு, இக்காலப் பகுதிக்குள் கூடுதல் கொழுந்து பறிப்பவர் மற்றும் தரமான கொழுந்து பறிப்பவர் வெற்றியாளராக தெரிவுசெய்யப்படுவார்.
இதில் தலவாக்கலை – பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் கிரேட்வெஸ்டன் தோட்டத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அந்தனி இரேஷா ராஜலட்சுமி முதலிடத்தை பிடித்துள்ளார்.
அவருக்கு 6 லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா பணப்பரிசும், தங்கப்பதக்கமும், 43 இன்ச் அங்குலம் கொண்ட ஸ்மார்ட் டிவி ஒன்றும் வழங்கப்பட்டது.
மேலும், ஒரு இலட்சம் ரூபாய் பணப்பரிசும், ஏனைய 03 வெற்றியாளர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும், பதக்கங்களும் வழங்கப்பட்டது.
தேயிலை துறையின் எதிர்கால இருப்பினை தக்க வைக்கும் முகமாகவும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தவதற்காகவும் , உட்சாகப்படுத்துவதற்காகவும் வருடந்தோரும், இந்த போட்டி நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com