கனேமுல்ல சஞ்சீவ கொலை : இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்கினால் 12 இலட்சம் ரூபா பணம்

Aarani Editor
0 Min Read
இஷாரா செவ்வந்தி

நாட்டின் பாதுகாப்பு துறைக்கு சவால் விடுத்த கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியை கைது செய்வதில் பொலிசாருக்கு சவால் நிலை ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரியை கைது செய்த பொலிசாருக்கு , துப்பாகிதாரிக்கு உதவிய பெண்ணை கைது செய்ய முடியாத நிலைக் காணப்படுகிறது.

இந்நிலையில் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 12 இலட்சம் ரூபா பணம் வழங்கப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய தகவல் வழங்க விரும்புவோர் 071 8591727, 071 8591735 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *