கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் கற்கும் மாணவர்கள் சிலர் மீது பல்கலைக்கழக நிர்வாகம் அநீதி இழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் குரல் எழுப்பிய மாணவர்கள் மீது வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது
இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மாணவர்கள் தமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிகக் கற்கைகள் பீட மாணவர்கள் ஒன்றியத்தினரால் குறித்த ஊடக சந்திப்பானது முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை வளாகத்தில் காணப்படும் விடுதி தொடர்பான குறைபாடுகள் உணவருந்துவதற்கன தொகுதி மலசலகூடம் தொடர்பான குறைபாடுகள் தொடர்ச்சியாக காணப்பட்டு வந்ததாகவும் இந்த விடயம் தொடர்பில் நிர்வாகத்திற்கு எதிராக குரல்கொடுத்த பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேருக்கு இரு வாரங்களுக்கான கல்வித் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் பாராமுகமாக இருப்பதன் காரணமாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தாம் தயாராக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Link : https://namathulk.com