பெண் அமைச்சரின் நெகிழ்வூட்டும் செயற்பாடு

Aarani Editor
1 Min Read
சரோஜா சாவித்திரி போல்ராஜ்

அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், தனது வெளிநாட்டு பயணத்திற்கு வழங்கப்பட்ட பணத்தின் மிகுதியை சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சிடம் மீள ஒப்படைத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் தனது சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளார்.

அமைச்சிடம் பெற்றுக்கொண்ட பணத்தில் எஞ்சிய 240 அமெரிக்க டொலர்களை அமைச்சின் பொருளாளரிடம் அவர் ஒப்படைத்துள்ளார்.

அது தொடர்பான ரசீது அதன் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 11 முதல் 16ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு 240 அமெரிக்க டொலர்களை மீதப்படுத்தியுள்ளார். இலங்கை நாணயத்தின் பெறுமதி அது 69,960 ரூபாவாகும்.

அரச நிதியை முறையற்ற வகையில் பலர் பயன்படுத்துகின்றனர்.

கடந்தகாலங்களில் முன்னாள் ஜனாதிபதிகள் கூட தங்களின் வெளிநாட்டு பயணங்களுக்காக அதிகளவு பணத்தை செலவிட்டுள்ளனர்.

இந்நிலையில் தனது வெளிநாட்டு பயணத்திற்காக வழங்கப்பட்ட பணத்தின் மிகுதியை அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், அமைசிடமே திருப்பி செலுத்தியது மட்டுமல்லாது அதற்கான ரசீதையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *